Wednesday, October 7, 2009

சிதம்பரம் நாடாளமன்ற தொகுதியில் இலவச வேலை வாய்ப்பு முகாம் நாளை 08/10/09 நடக்கிறது

சிதம்பரம் நாடாளமன்ற தொகுதி மேம்பாட்டு மையம் தொடக்க விழா , நடமாடும் கட்டணமில்லா கம்ப்யூட்டர் பயிற்சி மையம் மற்றும் இலவச வேலை வாய்ப்பு முகாம் போன்றவை சிதம்பரம் ஜி.எம் வாண்டையார் திருமண மஹாலில் நாளை வியாழகிழமை காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது.

இந்த விழாவில் படித்து பட்டம் பெற்று வேலை வாய்ப்பு இன்றி இருக்கும் இளைஞர்களுக்கு வழி காட்டவும், உதவி செய்யவும் வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் தனியார் நிறுவனங்களின் ஒத்துளைபோடு சிதம்பரம் நாடாளமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவனின் முயற்சியால் இந்த வேலை வாய்ப்பு முகாம் நடை பெறுகிறது.

இந்த இலவச வேலை வாய்ப்பு முகாமில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் இளங்கலை அறிவியல் பட்டதாரிகள் , இன்ஜினியரிங் முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம். தங்களது கல்வி சான்றிதழ் மற்றும் புகைப்படத்துடன் வர வேண்டும். கட்டணம் ஏதும் இல்லை.
Source : தினத்தந்தி(07 - 10 - 09) பார்க்க பக்கம் என் : 8

தி மு க சார்பில் வேலை வாய்ப்பு முகாம் அமைச்சர் பன்னீர் செல்வம் அறிவிப்பு