Wednesday, October 7, 2009

சிதம்பரம் நாடாளமன்ற தொகுதியில் இலவச வேலை வாய்ப்பு முகாம் நாளை 08/10/09 நடக்கிறது

சிதம்பரம் நாடாளமன்ற தொகுதி மேம்பாட்டு மையம் தொடக்க விழா , நடமாடும் கட்டணமில்லா கம்ப்யூட்டர் பயிற்சி மையம் மற்றும் இலவச வேலை வாய்ப்பு முகாம் போன்றவை சிதம்பரம் ஜி.எம் வாண்டையார் திருமண மஹாலில் நாளை வியாழகிழமை காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது.

இந்த விழாவில் படித்து பட்டம் பெற்று வேலை வாய்ப்பு இன்றி இருக்கும் இளைஞர்களுக்கு வழி காட்டவும், உதவி செய்யவும் வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் தனியார் நிறுவனங்களின் ஒத்துளைபோடு சிதம்பரம் நாடாளமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவனின் முயற்சியால் இந்த வேலை வாய்ப்பு முகாம் நடை பெறுகிறது.

இந்த இலவச வேலை வாய்ப்பு முகாமில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் இளங்கலை அறிவியல் பட்டதாரிகள் , இன்ஜினியரிங் முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம். தங்களது கல்வி சான்றிதழ் மற்றும் புகைப்படத்துடன் வர வேண்டும். கட்டணம் ஏதும் இல்லை.
Source : தினத்தந்தி(07 - 10 - 09) பார்க்க பக்கம் என் : 8

தி மு க சார்பில் வேலை வாய்ப்பு முகாம் அமைச்சர் பன்னீர் செல்வம் அறிவிப்பு


Saturday, September 19, 2009

கடல் ஆய்வு செயற்கைக்கோள் செப். 23ஆம் தேதி செலுத்தப்படும்: இஸ்ரோ

நமது நாட்டின் கடல் பரப்பில் எங்கெல்லாம் மீன் வளம் உள்ளது என்பதையும், கடலோரப் பகுதிகளை ஆய்வு செய்யும் திறனையும் கொண்ட ஓசன்சாட்-2 என்ற செயற்கைக்கோளை வரும் 23ஆம் தேதி விண்ணில் செலுத்துகிறது இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ).பி.எஸ்.எல்.வி. என்றழைக்கப்படும் இந்தியாவின துருவ செயற்கைக்கோள் செலுத்து வாகனத்தின் மூலம் 970 கி.கி. எடைகொண்ட இந்த செயற்கைக்கோள் சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணி்ல் செலுத்தப்படுகிறது.மீன் வளம், கடலோரப் பகுதிகள் ஆய்வு, வானிலை மாற்றம் ஆகிய பணிகளை மேற்கொள்ளும் கருவிகளுடன் கூடிய ஓசன்சாட்-2 வரும் 23ஆம் தேதி மதியம் விண்ணில் செலுத்தப்படவுள்ளது என்று இஸ்ரோ பேச்சாளர் எஸ். சத்தீஸ் கூறினார். 10 ஆண்டுகளுக்கு முன்னர் விண்ணில் செலுத்தப்பட்ட ஓசன்சாட்-1 என்ற செயற்கைக்கோள் கடலின் உயிரி பரவல் மற்றும் கனிம வளங்கள் குறித்து ஆய்வு செய்து வந்தது. இந்த செயற்கைக்கோளின் வாழ் காலம் முடிந்துவருவதைத் தொடர்ந்து அதன் இரண்டாவது மேம்படுத்தப்பட்ட வடிவான ஓசன்சாட்-2 செலுத்தப்படுகிறது.
Source: Webdunia

தென் ஆப்ரிக்கா சென்றது இந்திய அணி



மும்பை: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கும் கேப்டன் தோனி, சச்சின் உள்ளிட்ட இந்திய அணியினர், தென் ஆப்ரிக்கா சென்றனர். தென் ஆப்ரிக்காவில் வரும் 22ம் தேதி முதல் அக்., 5ம் தேதி வரை சாம்பியன்ஸ் டிராபி (மினி உலக கோப்பை) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட எட்டு அணிகள் பங்கேற்கின்றன. "ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா அணிகளும், "பி' பிரிவில் இங்கிலாந்து, இலங்கை, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன. இத்தொடரில் பங்கேற்க இலங்கை, நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் ஏற்கனவே தென் ஆப்ரிக்கா சென்றுவிட்டன. இலங்கையில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரை வெற்றியுடன் முடித்த இந்திய அணியினர், நேற்று தென் ஆப்ரிக்கா பயணம் மேற்கொண்டனர். இவர்கள் மும்பையில் இருந்து விமானம் மூலம் துபாய் சென்றனர். பின், துபாயிலிருந்து விமானம் மூலம் ஜோகனஸ்பர்க் செல்கின்றனர். இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு எதிராக பயிற்சி போட்டியில் நாளை விளையாடுகிறது. வரும் 26ம் தேதி இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தானை சந்திக்கிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியினர்: தோனி (கேப்டன்), சச்சின், டிராவிட், காம்பிர், யுவராஜ், ரெய்னா, ஹர்பஜன், யூசுப் பதான், அபிஷேக் நாயர், பிரவீண் குமார், ஆஷிஸ் நெஹ்ரா, ஆர்.பி. சிங், இஷாந்த் சர்மா, அமித் மிஸ்ரா, தினேஷ் கார்த்திக்.

Source : Dinamalar

உலகம் முழுவதும் 100 கோடிபேர் பட்டினி கிடக்கும் நிலை : ஐ.நா. கவலை


உலகிலுள்ள ஏழை மக்களின் பட்டினியைப் போக்க ஐ.நா.சபையின் உலக உணவுத் திட்டம் உதவி வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் ஆபிரிக்கக் கண்டத்தில் உள்ள ஏழை மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்துக்கு நடப்பாண்டு 33 ஆயிரத்து 500 கோடி ரூபா நிதிக்கு 'பட்ஜெட்' போடப்பட்டது. ஆனால் இந்தத் திட்டத்துக்கு 13 ஆயிரம் கோடி ரூபா மட்டுமே கிடைத்துள்ளது. பொருளாதார பின்னடைவு காரணமாக எதிர்பார்க்கப்பட்ட நிதி உதவி கிடைக்கவில்லை. இதனால் இந்த ஆண்டு 100 கோடி பேர் பட்டினி கிடக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக ஐ.நா.சபை கவலை தெரிவித்துள்ளது.இது தொடர்பாக ஐ.நா.உலக உணவு திட்ட அலுவலகம் கூறுகையில்,"மக்கள் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள். பொருளாதார பின்னடைவு காரணமாக நிலைமை மோசமாகி உள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து இருப்பது மக்களை மேலும் அதிகளவில் பாதித்துள்ளது. இதற்கு இந்தியாவும், பாகிஸ்தானும் கூட விதிவிலக்கல்ல. வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் மக்களின் தொகை அதிகமாகவுள்ள நாடுகளில் இந்தியா 25 ஆவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் இந்த பட்டியிலில் 11ஆவது இடத்தில் உள்ளது" எனத் தெரிவித்துள்ளது.

Source :வீரகேசரி இணையம் 9/18/2009 2:36:22 PM


Wednesday, May 20, 2009

கிரசென்ட் நல் வாழ்வு சங்கத்தில் துவங்கியது தட்டச்சி பயிற்சி



உலகமே கணினி மயமாகிவிட்ட இந்த காலத்தில்.கிரசென்ட் நல் வாழ்வு சங்கம் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு தட்டச்சி பயிற்சி முகாம் மாணவர்களிடம் அதிக வரவேற்பை பெற்று உள்ளது. மிக ஆர்வத்துடன் மாணவ மாணவிகள் இந்த இலவச தட்டச்சி பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.கோடை விடுமுறையில் கணினி பயிற்சி மற்றும் தட்டச்சி பயிற்சி மிக பயனுள்ளதாக இருக்கின்றது என்று மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் தெரிவிதனர்.

Tuesday, May 19, 2009

நகர ஜமாதுல் உலமா நடத்திய கோடை கால தீனியாத் பயிற்சி நிறைவு விழா



நகர ஜமாதுல் உலமா நடத்திய கோடை கால தீனியாத் பயிற்சி மற்றும் நிறைவு விழா கவுஸ் பள்ளி வளாகத்தில் நடை பெற்றது. இதில் வகுப்பு வாரியாக பிள்ளைகள் பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை தட்டி சென்றனர்.இதில் பயான் போட்டியில் பங்குபெற்ற பாரிஸ் அஹமத் என்ற மாணவர் இந்திய சுத்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு என்ற தலைப்பில் மிக சிறப்பாக பேசி அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார், அனைவரின் பாராட்டையும் பெற்றார் எங்களின் சர்ர்பாக அவருக்கு வாழ்த்துக்கள்.அதற்கு முன்னர் நபிகளாரின் நற்பண்புகள் என்ற தலைப்பில் பேசிய ரெஜினா பேகம் மற்றும் உம்மு ஹபிபா நபிகளாரின் தியாகத்தையும் அவர்கள் செய்த உலக சாதனைகளை பற்றியும் மிக அற்புதமாக பேசினார்கள்.அதனை தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன , இதில் ஜகரியா நானா , டவுன் ஹாஜி யஹயா சாபு, காஜா மைனுதீன் மிஸ்பாஹி, அபுதுல் சமத் ரசாதி , லியாகத் அலி மன்பயி சித்திக் அலி பாகவி மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர் விழா இனிதே நிறைவுற்றது.





Monday, May 18, 2009

நகர ஜமாதுல் உலமா நடத்திய தீனியாத் போட்டிகள்


கடந்த இருபது நாட்களாக பரங்கிபேட்டை நகர ஜமாதுல் உலமா பேரவை நடத்திய தீனியாத் பயிற்சி வகுப்புகள் முடிந்து நேற்று போட்டிகள் நடைபெற்றன. இதில் சுமார் 150 பிள்ளைகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இதில் நகர ஜமாதுல் உலமா தலைவர் காஜா மைனுதீன் மிஸ்பாஹி , அபுதுல் சமத் ரசாதி , லியாகத் அலி மன்பயி சித்திக் அலி பாகவி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளின் பரிசளிப்பு விழா இன்று மாலை 4 மணி அளவில் நடைபெறஉள்ளது.

Thursday, March 12, 2009

நன்றி அறிவிப்பு






தமிழக அரசின் சிறுபான்மையினருக்கான இலவச கல்வித்திட்டத்தை கடலூர் மாவட்டத்தில் முதல்முதலாக பரங்கிபேட்டையை தேர்ந்து எடுத்து செயல்படுத்திய ராஜாராமன் (SSA - CEO Cuddalore District) அவர்களுக்கும் இத்திட்டம் முதன்முதலில் பரங்கிபேட்டையில் செயல்பட தனது முழு முயற்சியை மேற்கொண்டு இத்திட்டம் செயல்படுவதற்கு வாய்பளித்த ஹாஜி M.S.முஹம்மது யூனுஸ் ( தலைவர் இஸ்லாமிய இக்கிய ஜமாஅத் மற்றும் பேரூராட்சி மன்றம்) அவர்களுக்கும் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் எங்களது நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.

இப்படிக்கு
நண்பர்கள் பி என் ஒ
Friendspno
தலைவர் மற்றும் நிர்வாகிகள்

Friday, January 9, 2009

இறப்பு செய்தி

அஸ்ஸலாமு அழைக்கும்
டில்லி சாஹிப் தர்கா புது நகரில் குப்பத்கர் என்கிற பசீர் அஹமத் அவர்களின் மருமகனும், சுலைமான் அவர்களின் மச்சானும், ரஹ்மதுல்லாஹ், முத்தலீப் இவர்களின் சகலபாடியுமான பண்டாரி சம்சுதீன் அவர்கள் மர்ஹீம்ஆகிவிட்டார்கள் இன்ஷா அல்லாஹ் 4:00 மணி அளவில் நல்லடக்கம் கிலுர்நபி பள்ளியில்
இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்

12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற கல்லூரி மாணவர்ககுக்கு மாதந்தோறும் கல்வி உதவிதொகை

12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற கல்லூரி மாணவர்ககுக்கு மாதந்தோறும் கல்வி உதவிதொகை 28-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது ....
இந்த கல்வி உதவி தொகையை பெற +2 தேர்வில் 80% மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும். இந்த கல்வி ஆண்டில் (2008 - 09) இளங்கலை பட்டம் படிக்கும் போது மாதம் ரூ:1000 முதுகலை பட்டம் படிக்கும் போது மாதம் ரூ:2000 பெறலாம்.
மருத்துவம், இன்ஜினியரிங் உள்ளிட்ட தொழில் கல்வி படிக்கும் இளங்கலை மாணவர்களுக்கு முதல் மூன்று ஆண்டுகளுக்கு மாதம் ரூ:1000 நான்காவது மற்றும் ஐந்தாவது ஆண்டுகளில் மாதம் ரூ:2000 வழங்கப்படும்.இந்த உதவி தொகை ஒரு கல்வி ஆண்டில் பத்து மாதங்களுக்கு கிடைக்கும். குறிப்பு : குடும்ப ஆண்டு வருமானம் 4.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும் மொத்தம் 4883 மாணவ மாணவிகளுக்கு உதவி தொகை வழங்க பட இருக்கிறது. உதவி தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் இதர விபரங்களை www.tn.gov.in/dge என்ற இணயத்தில் பெற்று கொள்ளலாம்.

இணை இயக்குனர் (மேல்நிலை)அரசு தேர்வுகள் இயக்கம் ,

D.P.I. வளாகம் கல்லூரி சாலை,

சென்னை - 600006

பூர்த்தி செய்ய பட்ட விண்ணப்பத்தை நேரடியாகவோ பதிவு அஞ்சல் அல்லது விரைவு தபால் மூலமாகவோ இந்த மாதம் 28-01-09 தேதிக்குள் மேலே உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.விண்ணப்பம் அனுப்பும் தபால் உரையின் மேல் கல்லூரி மாணவர்களுக்கான மத்திய அரசின் கல்வி உதவி தொகை திட்டம் என்று குறிப்பிட பட வேண்டும்.

நன்றி தின தந்தி

Monday, January 5, 2009

பரங்கிபேட்டை - கிள்ளை பாலம் வேலை துவங்கியது




கடந்த மாதம் பரங்கிபேட்டை - கிள்ளை பாலம் வேலை துவங்கி தொடர்ந்து வேகமாக நடைபெற்று வருகிறது. .இது குறித்து P.N.C CONSTRUCTION - சென்னை மேனேஜர் ஒருவர் கூறுகையில் இத்திட்டத்திற்கு சுமார் தமிழ் நாடு அரசு சார்பில் ரூ:16 கோடி ஒதுக்க பட்டுள்ளது.அதில் ரூ:13.24 கோடிக்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.இப்பணி இன்னும் பதினைந்து(15) மாதத்தில் நிறைவு பெரும் என்று கூறினார்.

பரங்கிபேட்டையிளிரிந்து சிதம்பரத்திற்கு செல்லும் வியாபாரிகள், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் இத்திட்டத்தின் மூலம் பயன் அடைவார்கள்.

கிழக்கு கடற்கரை சாலையாக அமைய வாய்புள்ளதால் பரங்கிபேட்டையிளிரிந்து கடலூர் மற்றும் சென்னைக்கு செல்லும் மாணர்வர்கள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சியடைதனர்.இது நமதூர் மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்தது.

இதனால் நீண்ட காலமாக பேருந்து வசதி குறைவாக இருந்த நமதூரில் பேருந்து வசதி மற்றும் புதிய பேருந்து நிலையம் அமைய அதிக வாய்புள்ளது.
நன்றி - cwo

Sunday, January 4, 2009

ஜிமெயில் பயனாளர்களுக்கான செய்தி

ஜிமெயில் பயனாளர்களுக்கான செய்தி:ஜிமெயில் தனது பயனாளர்களுக்காக ஒரு புதிய பாதுகாப்பு முறையை ஏற்படுத்தியுள்ளது.நீங்கள் உங்கள் அலுவலகத்திலோ அல்லது வெளியில் ப்ரௌசிங் செண்டரிலோ ஜிமெயில் பார்த்துவிட்டு லாக்-அவுட் செய்யாமல் வந்துவிட்டால் உடனடியாக வேறு கணினி மூலமாக லாகின் செய்து அந்த கணினியில் உள்ள உங்கள் ஜிமெயில் இணைப்பை துண்டிக்க முடியும்.அல்லது உங்கள் ஜிமெயிலை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா என்றும் அறிந்து கொள்ளலாம்.http://googlesystem.blogspot.com/2008/07/find-who-has-access-to-your-gmail.html

தமிழில் ஜிமெயிலை தமிழில் காண உங்கள் ஜிமெயில் திரையில் மேல் பகுதியில் setting என்ற பகுதிக்கு சென்று ,அதில் Gmail display Language -ல் Tamil- தேர்வு செய்தால் உங்கள் ஜிமெயில் திரை இப்போது தமிழில் தெரியும்.

நன்றி தமிழ் கம்ப்யூட்டர்

Saturday, January 3, 2009

இறப்புச் செய்தி

நாட்டான் கிணற்று முடுக்கில் மர்ஹீம் முஹம்மத் சித்திக் அவர்களின் மகனாரும், மர்ஹீம் ஹக்கீம் , முத்து நானா அவர்களின் மருமகனாரும் S.உதுமான் அலி அவர்களின் தம்பியும் , கவுஸ் ஹமீது, சாகுல், முத்து ராஜா இவர்களின் தகப்பனாருமாகிய S.முஸ்தபா மர்ஹீம் ஆகிவிட்டார்கள் இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4:00 மணி அளவில் நல்லடக்கம் வாத்தியா பள்ளயில்.


இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்

Thursday, January 1, 2009

இறப்புச் செய்தி

கொள்ளங்கடை தெருவில் மர்ஹீம் அப்பாஸ் மரைக்கார் அவர்களின் மகளாரும் மர்ஹீம் D.பாஷா அவர்களின் மனைவியாரும் B.தல்பாதர் மரைக்கார்(அவர்களின் சிறிய தாயாரும்) B.சாகுல் ஹமீது,B.ஹமீது கௌஸ் மரைக்கார்,B.அப்பாஸ் மற்றும் B.நைனா மரைக்கார் இவர்களின் தாயாருமாகிய A.ஆய்ஷா பீவி மர்ஹீம் ஆகிவிட்டார்கள் இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 6 மணியளவில் நல்லடக்கம் மீராப்பள்ளியில்.

இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்

புதுபள்ளி சம்பந்தமாக இரு தரப்பினருடன் சுமூகம்.

ஜமாஅத் முயற்சியில் தலைவர் ஹாஜி. M.S.முஹம்மது யூனுஸ் நானா தலைமையில் கடந்த ஞாயிறு 29.12.2008 அன்றும் அதனை தொடர்ந்து இன்று 01.01.2009 (தனித்தனியாக) கூட்டம் நடைபெற்றது. இரு தரப்பினறும் தங்கள் கருத்துக்களையும் அவர் அவர்கள் சார்ந்த நிர்வாக அமைப்பு (பத்து பேரு கொண்ட) பட்டியலையும் ஜமாத்திடம் தெரிவித்தனர்.

ஜமாஅத் இருதரபினரின் பட்டியலை பெற்று கொண்டு ஆலோசித்து நிர்வாகிகள் தேர்ந்து எடுக்க உள்ளனர்...... இருதரப்பினர் மீதான வழக்கும் பள்ளி நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு சம்பந்தமாக உள்ள இடைகால தடையையும் வாபஸ் வாங்க படுகிறது.....
இன்ஷா அல்லாஹ் அமைய போகும் புதிய நிர்வாகத்திற்காக துவ ...
செய்வோம் ..
நன்றி கிரசன்ட்