Saturday, September 19, 2009

தென் ஆப்ரிக்கா சென்றது இந்திய அணி



மும்பை: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கும் கேப்டன் தோனி, சச்சின் உள்ளிட்ட இந்திய அணியினர், தென் ஆப்ரிக்கா சென்றனர். தென் ஆப்ரிக்காவில் வரும் 22ம் தேதி முதல் அக்., 5ம் தேதி வரை சாம்பியன்ஸ் டிராபி (மினி உலக கோப்பை) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட எட்டு அணிகள் பங்கேற்கின்றன. "ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா அணிகளும், "பி' பிரிவில் இங்கிலாந்து, இலங்கை, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன. இத்தொடரில் பங்கேற்க இலங்கை, நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் ஏற்கனவே தென் ஆப்ரிக்கா சென்றுவிட்டன. இலங்கையில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரை வெற்றியுடன் முடித்த இந்திய அணியினர், நேற்று தென் ஆப்ரிக்கா பயணம் மேற்கொண்டனர். இவர்கள் மும்பையில் இருந்து விமானம் மூலம் துபாய் சென்றனர். பின், துபாயிலிருந்து விமானம் மூலம் ஜோகனஸ்பர்க் செல்கின்றனர். இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு எதிராக பயிற்சி போட்டியில் நாளை விளையாடுகிறது. வரும் 26ம் தேதி இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தானை சந்திக்கிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியினர்: தோனி (கேப்டன்), சச்சின், டிராவிட், காம்பிர், யுவராஜ், ரெய்னா, ஹர்பஜன், யூசுப் பதான், அபிஷேக் நாயர், பிரவீண் குமார், ஆஷிஸ் நெஹ்ரா, ஆர்.பி. சிங், இஷாந்த் சர்மா, அமித் மிஸ்ரா, தினேஷ் கார்த்திக்.

Source : Dinamalar

No comments:

Post a Comment