Monday, November 8, 2010

ஹர்பஜன் சிங் அதிரடி சதம் . நாங்கள் நம்பர் ஒன் அணிதான் என்று நிறுபித்தது இந்தியா

அகமதாபாத் 08/11/2010

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கிடைய முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குஜராத் தலை நகர் அகமதாபாத்தில் கடந்த நான்கு நாட்களாக நடை பெற்று வந்தது. இதில் முதலில் பேட் செய்த
இந்திய அணி 487 ரன்கள் எடுத்தது சேவாக் மற்றும் டிராவிட் சதம் விளாசினர்.



இதனை தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்க்சில் 459 ரன்கள் எடுத்தது இதில் ரய்டர் சதம் அடித்தார் மற்றும் தான் விளையாடிய முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் சதம் விளாசினார் கண் வில்லியம்சன் இவர் கிரிக்கெட் வரலாற்றில் முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த எட்டாவது வீரர் ஆவார் . தொடர்ந்து தனது இரண்டாவது இந்நிக்சை தொடங்கிய இந்திய அணி நான்காம் நாள் ஆட்ட நேர இறுதியில் 15 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்து தடுமாறியது. தொடர்ந்து களம் இறங்கிய இந்திய அணியின் கேப்டன் தோனியும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தார்.ஐந்தாம் நாளான இன்று நிதானமாக ஆடிய லக்ஸ்மன் 91 ரன்கள் குவித்தார் அதிரடியாகவும் நிதானத்துடனும் ஆடிய ஹர்பஜன் சிங் தனது முதல் சத்தத்தை விளாசினார்.இவர் 115 ரன்கள் 193 பந்துகளில் விளாசினார். ஹர்பஜன் சிங் மற்றும் லக்ஸ்மன் ஜோடி இந்திய அணியை வலுவான நிலைல்கு கொண்டு சென்றது. இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்க்சில் 266 ரன்கள் குவித்து நியூசிலாந்து அணியை விட 292 ரன்கள் முன்னிலை பெற்றது. இதை தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து 22-1 எடுத்திருந்த நிலையில் ஆட நேரம் முடிவடைந்தது. இதனால் வெற்றி தோல்வி இன்றி டிரா வில் முடிவடைந்தது.

இந்திய அணிக்கும் ஹர்பஜன் சிங்கிற்கும் வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment