Saturday, November 6, 2010

அந்தரத்தில் ஊசலாடும் உயிர்களுக்கு வாழ்த்துக்கள் !



குளிரறைகளில் அமர்ந்துகொண்டு, எந்த வித உடல் களைப்புமின்றி, வேலையின் போது ஏற்படும் சிறு சிறு இடைஞ்சல்களுக்காக பெரிதும் சலித்துக் கொள்ளும் நாம், உழைப்பாளர்களெனும் பட்டியலின் கீழ் நேரடியாக உள்ளடக்கப்படக் கூடிய மனிதர்களைப் பார்த்திருக்கின்றோமா? நான் பார்த்திருக்கிறேன்.

மத்தியகிழக்கு நாடொன்றில் பணிபுரியப் போயிருந்த சமயம், பல மாடிக் கட்டிடம் ஒன்றின் உச்சியில் தொங்கிக் கொண்டு கண்ணாடி துடைக்கையில் தவறிக் கீழே விழுந்து அந்த இடத்திலேயே சிதைந்து இறந்து போன ஒரு நேபாள நாட்டுத் தொழிலாளியைப் பார்த்திருக்கிறேன். அடுத்த நாள் அவரது இடத்தில்இன்னுமொருவர் தொங்கிக் கொண்டிருந்தார்.




தினந்தோறும் காலைவேளைகளில் இது போன்ற கூலி வேலைகளுக்காக பாகிஸ்தானியர், ஆப்கானிஸ்தர்கள், நேபாளிகளெனப் பலரும் பல பிரதான தெருக்களில் கொடிய வெயிலில் வாடியபடி, தம்மை அழைத்துச் செல்பவர்களுக்காகக் காத்திருப்பதைக் காணலாம். வாழ்வதற்காக மனிதனுக்கு பணம் தேவையாக இருக்கிறது. அதனை நேர்மையாக ஈட்டும் இவர்களைப் பாராட்டலாம்.

பெருநகரங்களில் வானைத் தொடுமளவுக்கு எழும்பியிருக்கும் பிரமாண்டமான கட்டடங்களைப் பார்த்து வியந்தபடி கடந்துசெல்கிறோம். அந்த அழகு, அந்த பிரமாண்டம், அந்த நவீனத்துக்காக அந்தக் கட்டிடங்கள் எத்தனை உயிர்களைப் பலிகொண்டிருக்குமென ஒரு கணமேனும் சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா? அந்தக் கட்டட வடிவத்தை வடிவமைத்ததற்காக, நிர்மாணித்ததற்காக பல நிபுணர்கள் விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றுக்கொள்ளும் சமயத்தில், அவர்களது கனவுகள் சாத்தியப்படுவதற்காக மிக அபாயமான களத்தில் நின்று, மிகச் சிரமத்துக்கு மத்தியில் அவற்றைக் கட்டியெழுப்பியவர்களைப் பற்றி எப்பொழுதேனும் நினைவுகூறப்படுகின்றதா? இன்றைய படங்கள் அவர்களது சிரமங்களைச் சிறிதளவு
தொட்டுக் காட்டுகின்றன. பாருங்கள்.
























பார்க்கும்போதே உடல் சிலிர்க்கிறதல்லவா? தாங்கள் அறிந்திராத பிற நாடுகளுக்கு தொழிலுக்காக அனுப்பப்படும் தமது பிள்ளைகள், சகோதரர்கள், துணைகள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து என்ன பாடுபடுகிறார்களென நிறையப் பேர் அறிந்திருப்பதில்லை. இது போன்ற மிகக் கடினமான பணிகளெனத் தெரிந்திருந்தால் அனுப்பியிருக்கவும் மாட்டார்கள் அல்லவா?

சிந்திப்போம். அவர்களை கௌரவிப்போம்.

எனது இந்தப் பதிவை இது போன்ற எல்லா உழைப்பாளர்களுக்கும் சமர்ப்பிக்கின்றேன் !

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.

Sunday, October 17, 2010

வங்க தேச கிரிக்கெட் வரலாற்றில் சாதனை







வங்க தேச கிரிக்கெட் வரலாற்றில் சாதனை சகிபுல் ஹசன் தலைமையிலான வங்கதேச கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் நியூசீலாந்து அணியுடன் விளையாடியது . இப்போட்டிகள் வங்கதேசத்தில் நடைபெற்றன . இத்தொடரில் சகிபுல் ஹசன் தலைமையிலான வங்கதேச கிரிக்கெட் அணி 4 - 0 என்ற கணக்கில் மிகபெரிய வெற்றி பெற்றது. ... இந்த வெற்றியின் மூலம் கிரிக்கெட் உலகில் மிக வலிமையுடன் வளர்ந்து வரும் அணி என நிருபித்துள்ளது சகிபுல் ஹசன் தலைமையிலான வங்கதேச கிரிக்கெட் அணி.....

Friday, October 1, 2010

அயோத்தி நிலம் 3 தரப்பினருக்கு சொந்தம்: அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு



டெல்லியிலிருந்து சுமார் 550 கி.மீ. தொலைவில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளது அயோத்தி நகர். அயோத்தியில் சர்ச்சைக்குரிய சுமார் இரண்டரை ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பதில் இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகளுக்கு இடையே சிக்கல் நீடித்து வருகிறது. அயோத்தி விவகாரம் தொடர்பாக அனைத்து வழக்குகளும் இணைக்கப்பட்டு அவற்றை விசாரிக்க அலகாபாத் உயர் நீதிமன்ற சிறப்பு பெஞ்ச் அமைக்கப்பட்டது.

60 ஆண்டுகளாக நீடித்து வரும் வழக்கில் அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ பெஞ்ச் தனது விசாரணையை நிறைவு செய்து 24.09.2010 அன்று தீர்ப்பு என்று அறிவித்தது.அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ பெஞ்ச் தீர்ப்பு வழங்குவதை ஒத்திவைக்க வேண்டும் என்றும், கோர்ட்டுக்கு வெளியே சமாதானமாக செல்ல முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் திரிபாதி என்ற ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வழக்கு தொடர்ந்தார். திரிபாதியின் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தீர்ப்பை ஒத்திவைக்கக் கோரிய மனுவை விசாரிப்பதற்காக தீர்ப்பு வெளியிட ஒரு வாரம் தடை விதித்தது.

இந்தத் தடை உத்தரவை 28.09.2010 அன்று விலக்கிக் கொண்டதோடு ஒத்திவைக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இதையடுத்து அயோத்தி வழக்கில் இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் தீர்ப்பு வழங்கப்படும் என, அலகாபாத் ஐகோர்ட்டின் சிறப்பு அதிகாரி ஹரிசங்கர் துபே கூறினார்.

அதன்படி இன்று பிற்பகல் 3.30 மணி அளவில், நீதிபதிகள் எஸ்.யு.கான், சுதிர் அகர்வால், டி.வி.சர்மா ஆகியோர் அடங்கிய சிறப்பு பெஞ்ச் தீர்ப்பை அறிவித்தது. அதன்படி இன்று 4 மணி அளவில் நீதிகள் தீர்ப்பை வாசித்தனர்.

அதன்படி இன்று 4 மணி அளவில் நீதிகள் தீர்ப்பை வாசித்தனர். தீர்ப்பில் அயோத்தி நிலம் மூன்று தரப்பினருக்கு சொந்தம் என்றும், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 3 மாதகால அவகாசம் உள்ளது என்றும் அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் சர்ச்சைக்குரிய நிலம் 2.5 ஏக்கரை மூன்றாக பிரிக்கப்படும் வரை தற்போதைய நிலை தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Friday, March 12, 2010

இலவச இரத்த பிரிவு பரிசோதனை முகாம்




இன்ஷா அல்லாஹ் நமது இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் M.S.முஹம்மத் யூனுஸ் நானா அவர்கள் தலைமையில் வரும் ஞாயிற்று கிழமை 14/03/2010 அன்று காலை 10am மணி முதல் மாலை 5pm மணி வரை நமது Friendspno சார்பாக நடக்கவிருக்கும் இலவச இரத்த பிரிவு பரிசோதனை முகாமில் அணைத்து சமய மக்களும் பங்குபெற்று பயனடையுமாறு கேட்டுகொள்கிறோம்.
குறிப்பு : இதில் இரத்த பிரிவு ஏற்கனவே தெரிந்தவர்களும் தங்கள் பெயரை பதிவுசெய்வதினால் அவசர இரத்த தேவைக்கு தாங்கள் விரும்பினால் உதவி புரிய வாய்பாக அமையும் என தெரிவித்து கொள்கிறோம்

Saturday, January 23, 2010

சர்வதேச பாஸ்போர்ட்(ordinary Indian Passport for Indian Citizens) பெற உடனே விண்ணப்பியுங்கள் ஹஜ் பயணிகளுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

ஹஜ் பயணத்திற்கு சர்வதேச பாஸ்போர்ட்(ordinary Indian Passport for Indian Citizens) அவசியம் வேண்டும் என்று சவுதி அரேபியா அரசு அறிவித்துள்ளது எனவே தமிழக ஹஜ் பயணிகள் உடனடியாக சர்வதேச பாஸ்போர்ட் (ordinary Indian Passport for Indian Citizens)பெற வின்னபிகுமாறு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. ஹஜ் 2009 இல் சர்வதேச பாஸ்போர்ட்களில் ஹஜ் விசா பெறுவது தவிர்க்க இயலாதது என்று சவுதி அரேபியா அரசு முடிவு எடுத்துள்ளது என மும்பை , இந்திய ஹஜ் குழுவின் முதன்மை செயல் அலுவலர் தெரிவித்துள்ளார். எனவே 2010 இல் ஹஜ் பயணம் மேற்கொள்ள இருக்கும் ஹஜ் பயணிகள் தங்களிடம் பாஸ்போர்ட் இல்லாதிருப்பின் அதற்காக இப்போத விண்ணப்பித்து பாஸ்போர்ட் பெற வேண்டுகோள் விடப்பட்டுள்ளது....

நன்றி தின தந்தி

Wednesday, October 7, 2009

சிதம்பரம் நாடாளமன்ற தொகுதியில் இலவச வேலை வாய்ப்பு முகாம் நாளை 08/10/09 நடக்கிறது

சிதம்பரம் நாடாளமன்ற தொகுதி மேம்பாட்டு மையம் தொடக்க விழா , நடமாடும் கட்டணமில்லா கம்ப்யூட்டர் பயிற்சி மையம் மற்றும் இலவச வேலை வாய்ப்பு முகாம் போன்றவை சிதம்பரம் ஜி.எம் வாண்டையார் திருமண மஹாலில் நாளை வியாழகிழமை காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது.

இந்த விழாவில் படித்து பட்டம் பெற்று வேலை வாய்ப்பு இன்றி இருக்கும் இளைஞர்களுக்கு வழி காட்டவும், உதவி செய்யவும் வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் தனியார் நிறுவனங்களின் ஒத்துளைபோடு சிதம்பரம் நாடாளமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவனின் முயற்சியால் இந்த வேலை வாய்ப்பு முகாம் நடை பெறுகிறது.

இந்த இலவச வேலை வாய்ப்பு முகாமில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் இளங்கலை அறிவியல் பட்டதாரிகள் , இன்ஜினியரிங் முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம். தங்களது கல்வி சான்றிதழ் மற்றும் புகைப்படத்துடன் வர வேண்டும். கட்டணம் ஏதும் இல்லை.
Source : தினத்தந்தி(07 - 10 - 09) பார்க்க பக்கம் என் : 8

தி மு க சார்பில் வேலை வாய்ப்பு முகாம் அமைச்சர் பன்னீர் செல்வம் அறிவிப்பு