நமது நாட்டின் கடல் பரப்பில் எங்கெல்லாம் மீன் வளம் உள்ளது என்பதையும், கடலோரப் பகுதிகளை ஆய்வு செய்யும் திறனையும் கொண்ட ஓசன்சாட்-2 என்ற செயற்கைக்கோளை வரும் 23ஆம் தேதி விண்ணில் செலுத்துகிறது இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ).பி.எஸ்.எல்.வி. என்றழைக்கப்படும் இந்தியாவின துருவ செயற்கைக்கோள் செலுத்து வாகனத்தின் மூலம் 970 கி.கி. எடைகொண்ட இந்த செயற்கைக்கோள் சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணி்ல் செலுத்தப்படுகிறது.மீன் வளம், கடலோரப் பகுதிகள் ஆய்வு, வானிலை மாற்றம் ஆகிய பணிகளை மேற்கொள்ளும் கருவிகளுடன் கூடிய ஓசன்சாட்-2 வரும் 23ஆம் தேதி மதியம் விண்ணில் செலுத்தப்படவுள்ளது என்று இஸ்ரோ பேச்சாளர் எஸ். சத்தீஸ் கூறினார். 10 ஆண்டுகளுக்கு முன்னர் விண்ணில் செலுத்தப்பட்ட ஓசன்சாட்-1 என்ற செயற்கைக்கோள் கடலின் உயிரி பரவல் மற்றும் கனிம வளங்கள் குறித்து ஆய்வு செய்து வந்தது. இந்த செயற்கைக்கோளின் வாழ் காலம் முடிந்துவருவதைத் தொடர்ந்து அதன் இரண்டாவது மேம்படுத்தப்பட்ட வடிவான ஓசன்சாட்-2 செலுத்தப்படுகிறது.
Source: Webdunia
Saturday, September 19, 2009
தென் ஆப்ரிக்கா சென்றது இந்திய அணி

மும்பை: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கும் கேப்டன் தோனி, சச்சின் உள்ளிட்ட இந்திய அணியினர், தென் ஆப்ரிக்கா சென்றனர். தென் ஆப்ரிக்காவில் வரும் 22ம் தேதி முதல் அக்., 5ம் தேதி வரை சாம்பியன்ஸ் டிராபி (மினி உலக கோப்பை) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட எட்டு அணிகள் பங்கேற்கின்றன. "ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா அணிகளும், "பி' பிரிவில் இங்கிலாந்து, இலங்கை, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன. இத்தொடரில் பங்கேற்க இலங்கை, நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் ஏற்கனவே தென் ஆப்ரிக்கா சென்றுவிட்டன. இலங்கையில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரை வெற்றியுடன் முடித்த இந்திய அணியினர், நேற்று தென் ஆப்ரிக்கா பயணம் மேற்கொண்டனர். இவர்கள் மும்பையில் இருந்து விமானம் மூலம் துபாய் சென்றனர். பின், துபாயிலிருந்து விமானம் மூலம் ஜோகனஸ்பர்க் செல்கின்றனர். இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு எதிராக பயிற்சி போட்டியில் நாளை விளையாடுகிறது. வரும் 26ம் தேதி இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தானை சந்திக்கிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியினர்: தோனி (கேப்டன்), சச்சின், டிராவிட், காம்பிர், யுவராஜ், ரெய்னா, ஹர்பஜன், யூசுப் பதான், அபிஷேக் நாயர், பிரவீண் குமார், ஆஷிஸ் நெஹ்ரா, ஆர்.பி. சிங், இஷாந்த் சர்மா, அமித் மிஸ்ரா, தினேஷ் கார்த்திக்.
Source : Dinamalar
உலகம் முழுவதும் 100 கோடிபேர் பட்டினி கிடக்கும் நிலை : ஐ.நா. கவலை
உலகிலுள்ள ஏழை மக்களின் பட்டினியைப் போக்க ஐ.நா.சபையின் உலக உணவுத் திட்டம் உதவி வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் ஆபிரிக்கக் கண்டத்தில் உள்ள ஏழை மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்துக்கு நடப்பாண்டு 33 ஆயிரத்து 500 கோடி ரூபா நிதிக்கு 'பட்ஜெட்' போடப்பட்டது. ஆனால் இந்தத் திட்டத்துக்கு 13 ஆயிரம் கோடி ரூபா மட்டுமே கிடைத்துள்ளது. பொருளாதார பின்னடைவு காரணமாக எதிர்பார்க்கப்பட்ட நிதி உதவி கிடைக்கவில்லை. இதனால் இந்த ஆண்டு 100 கோடி பேர் பட்டினி கிடக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக ஐ.நா.சபை கவலை தெரிவித்துள்ளது.இது தொடர்பாக ஐ.நா.உலக உணவு திட்ட அலுவலகம் கூறுகையில்,"மக்கள் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள். பொருளாதார பின்னடைவு காரணமாக நிலைமை மோசமாகி உள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து இருப்பது மக்களை மேலும் அதிகளவில் பாதித்துள்ளது. இதற்கு இந்தியாவும், பாகிஸ்தானும் கூட விதிவிலக்கல்ல. வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் மக்களின் தொகை அதிகமாகவுள்ள நாடுகளில் இந்தியா 25 ஆவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் இந்த பட்டியிலில் 11ஆவது இடத்தில் உள்ளது" எனத் தெரிவித்துள்ளது.
Source :வீரகேசரி இணையம் 9/18/2009 2:36:22 PM
Wednesday, May 20, 2009
கிரசென்ட் நல் வாழ்வு சங்கத்தில் துவங்கியது தட்டச்சி பயிற்சி
உலகமே கணினி மயமாகிவிட்ட இந்த காலத்தில்.கிரசென்ட் நல் வாழ்வு சங்கம் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு தட்டச்சி பயிற்சி முகாம் மாணவர்களிடம் அதிக வரவேற்பை பெற்று உள்ளது. மிக ஆர்வத்துடன் மாணவ மாணவிகள் இந்த இலவச தட்டச்சி பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.கோடை விடுமுறையில் கணினி பயிற்சி மற்றும் தட்டச்சி பயிற்சி மிக பயனுள்ளதாக இருக்கின்றது என்று மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் தெரிவிதனர்.
Tuesday, May 19, 2009
நகர ஜமாதுல் உலமா நடத்திய கோடை கால தீனியாத் பயிற்சி நிறைவு விழா
நகர ஜமாதுல் உலமா நடத்திய கோடை கால தீனியாத் பயிற்சி மற்றும் நிறைவு விழா கவுஸ் பள்ளி வளாகத்தில் நடை பெற்றது. இதில் வகுப்பு வாரியாக பிள்ளைகள் பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை தட்டி சென்றனர்.இதில் பயான் போட்டியில் பங்குபெற்ற பாரிஸ் அஹமத் என்ற மாணவர் இந்திய சுத்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு என்ற தலைப்பில் மிக சிறப்பாக பேசி அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார், அனைவரின் பாராட்டையும் பெற்றார் எங்களின் சர்ர்பாக அவருக்கு வாழ்த்துக்கள்.அதற்கு முன்னர் நபிகளாரின் நற்பண்புகள் என்ற தலைப்பில் பேசிய ரெஜினா பேகம் மற்றும் உம்மு ஹபிபா நபிகளாரின் தியாகத்தையும் அவர்கள் செய்த உலக சாதனைகளை பற்றியும் மிக அற்புதமாக பேசினார்கள்.அதனை தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன , இதில் ஜகரியா நானா , டவுன் ஹாஜி யஹயா சாபு, காஜா மைனுதீன் மிஸ்பாஹி, அபுதுல் சமத் ரசாதி , லியாகத் அலி மன்பயி சித்திக் அலி பாகவி மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர் விழா இனிதே நிறைவுற்றது.
Monday, May 18, 2009
நகர ஜமாதுல் உலமா நடத்திய தீனியாத் போட்டிகள்
Thursday, March 12, 2009
நன்றி அறிவிப்பு


தமிழக அரசின் சிறுபான்மையினருக்கான இலவச கல்வித்திட்டத்தை கடலூர் மாவட்டத்தில் முதல்முதலாக பரங்கிபேட்டையை தேர்ந்து எடுத்து செயல்படுத்திய ராஜாராமன் (SSA - CEO Cuddalore District) அவர்களுக்கும் இத்திட்டம் முதன்முதலில் பரங்கிபேட்டையில் செயல்பட தனது முழு முயற்சியை மேற்கொண்டு இத்திட்டம் செயல்படுவதற்கு வாய்பளித்த ஹாஜி M.S.முஹம்மது யூனுஸ் ( தலைவர் இஸ்லாமிய இக்கிய ஜமாஅத் மற்றும் பேரூராட்சி மன்றம்) அவர்களுக்கும் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் எங்களது நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.
இப்படிக்கு
நண்பர்கள் பி என் ஒ
Friendspno
தலைவர் மற்றும் நிர்வாகிகள்
இப்படிக்கு
நண்பர்கள் பி என் ஒ
Friendspno
தலைவர் மற்றும் நிர்வாகிகள்
Subscribe to:
Posts (Atom)
